உண்ணாநிலை போராட்டம்…
சென்ற வாரம் வெள்ளி.. சனி.. ஞாயிறு… என தொடர்ந்து மூன்று நாட்கள், தகவல்தொடர்பு துறையில் பணி புரியும் நண்பர்கள் பலர்.. என் அருமை சகோதரன் ஈழ தமிழனின் நலம் பேண.. உண்ணாநிலை போராட்டம் செய்தனர்.
முதல் நாளில் பத்து.. இருபது என வந்த தோழர்கள்… கடைசி நாளில் 250 என கூட்டமாக சேர்ந்து போராட்டம் செய்ததாக நண்பர் லட்சுமணராசா தெரிவித்தார். வைகோ.. நெடுமாறன் அய்யா.. சுபவீ.. கல்யாணி… திருமா.. சீமான்.. தாமரை… என எல்லா தமிழ் ஆதரவாளர்களும் வந்து வாழ்த்தியதை பெருமிதத்துடன் சொன்ன போது, நான் தவற விட்ட வாய்ப்பை நினைத்து வருத்தபடுகிறேன்.
சில புகைபடங்கள் இங்கே… நன்றி: லட்சுமணராசா



என் தமிழனுக்காக.. நானும் போராடுவேன். நண்பர்கள் விழைந்தால்… பெங்களூரில் அப்படி ஒரு உண்ணாநிலை அறப் போராட்டத்தை நடத்தவே…. பங்கு பெறவோ விரும்புகிறேன்.
நண்பா தயாரா?
~பெ.வெ.
