::படித்ததில் பிடித்தது::
இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அப்படியே படித்ததில் ஒரு பிடித்த செய்தி:
பொங்கலுக்கு எப்படியும் விடுமுறை எடுப்பீர்கள் குடும்பத்தாரோடு பொழுதுகள் கழிப்பீர்கள் என்று நம்புகிறேன். நாள்முழுவதையும் தொலைகாட்சி பெட்டிக்கு அடகு வைத்து உலக தொலைக்காட்சி வரலாறில் முதல்முறையாக உங்கள் தொலைக்காட்சிக்கு வரும் அந்த திரைப்படத்தில் கவனம் செலுத்தும் உறவுகளே. பொங்கல் நாளில் உங்கள் குடும்பங்களோடு உரையாடி பாருங்கள். முன்னரே தயாரித்த நகைசுவைகள் மூலம் உங்களை சிரிக்க வைக்க முயலும் பட்டிமன்றங்களில் மயங்கி கிடக்காமல் முடிந்தால் உங்கள் குடும்பத்தாரோடு விவாதியுங்கள் தமிழினம் வீழ்ந்தது யாரேலே என்று உலக வரலாற்றில் முதல்முறையாக தமிழின வரலாற்றை பகிர்ந்து கொள்ள முயலுங்கள்.தமிழ் புத்தாண்டின் முதல் நாளிலாவது தமிழனாக இருக்க முயல்வோம்.
நன்றி: http://tamizhanban.wordpress.com/

nice